Friday, February 15, 2019

உணவு பரிமாறும் முறை

பரிமாறும் உணவு, வாழை இலை நுனியில் (இடது பக்கம் மேலே) நாம் அதிகம் எடுத்தது கொள்ள கூடாதவைகள் தான் பரிமாறப்படும்.
.
இது நம் தமிழரின் பண்பாடுகளில் ஒன்று.
.
அவைகள் உடம்புக்கு கெடுதல் விளைவிப்பவை. கொஞ்சமாகத் தான் வைப்பார்கள்.
.
அதிகம் நாம் உணவில் எடுத்தது கொள்ளக்கூடாதவைகள், & மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடக் கூடாதவைகள். (ஆனால் நாக்குக்கு அதிக ருசியாக இருப்பவை 😊)
.
உப்பு,
ஊறுகாய் வகைகள்,
அப்பளம்,
வத்தல் வகைகள்,
இனிப்பு வகைகள்,
டீப் fப்ரை வகைகள்,
பொரியல்கள்,
போன்றவைகள் அங்கே வரிசையில் பரிமாறப்படும்.
காலை டிபனில் கூட பூரியை இடது பக்கம் தான் வைப்பார்கள்.
.
இவையெல்லாம் உடல் நலத்திற்காக மறைமுகமாக நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்த பாடங்கள்.
.
இன்று நாம் அதை மறந்தோம், உடலில் பல வியாதிகளை வரவழைத்துக் கொண்டோம், அவதிப்படுகிறோம்.

Tuesday, May 1, 2018

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!
.
கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே .!
.
எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள்
கூட சமநிலை அலைகளை பரப்புமடா
அடித்தவன் காதில் தெறிக்கும் போது
உற்சாக ஊற்று பெருகுமடா .....!
.
கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம்
அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில்
இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........!
.
சாணம் கரைத்து
வீட்டில் தெளித்து
ஆன்டி-பயோடிக் செய்திடுவோம்
நாளும் தூய்மை காத்திடுவோம் .......!
.
மார்கழி பொழியும்
மாக்கோலம் வரைவோம் அதை
ஊர்வன உண்டு பிழைத்திடுமே
இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....!
.
ஈர நெற்றியில் காய்ந்த விபூதி
பட்டை அடித்து திரிந்திடுவோம்
தலை நீர் உறிந்து
தலை வலி குறையும்
அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........!
.
குனிந்து நிமிர்ந்து பெண்களை எல்லாம்
வேலை செய்ய சொல்லிடுவோம்
இடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில்
சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம் .......!
.
ராமனை ஏமாற்றி
சீதையை மிரட்டி, கடத்திய
ராவணன் தலையில் கொல்லி வைத்தோம்
அன்றே புஷ்பக "விமானம்"
சொல்லி வைத்தோம் ..............!
.
சூரியன்
உதிக்கும் முன்பும்
மறைந்த பின்பும்
உணவை கையில் தொடமாட்டோம்
இரவில் உணவு
ஜீரண குறைவு
அதிலும் அறிவியல் வைத்ததை
சொல்லமாட்டோம் .............!
.
தலையில் கொட்டி
கணபதி வணங்கி அந்நாளை
இனிதாய் தொடங்கிடுவோம்
நினைவாற்றலை நாளும் வளர்த்திடுவோம் .....!
.
சனியின் கண்ணில்
புற ஊதாக்கதிரை கண்டு
அவன் கண்ணை கருப்பு துணியால்
கட்டி வைத்தவன் தமிழனடா .........!
.
நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்கும்
அதிசயம் அறிந்தவன் தமிழனடா
துளசி மாடம் வீட்டில் வைத்து
வணங்கியது அந்த நோக்கமடா...........!
.
இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு
என்னிடம் வந்து கேளுமடா
விஞ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் கற்ற அறிவியல் மேதை தமிழனடா
என் தாத்தன் பாட்டன் வாய்வழி
சொன்ன ஒற்றை நூல் தான்
உன் அறிவியல் என்பதை உணருமடா ....! 



..
நன்றி:- சித்தர்கள் & நவீன் தமிழன்.

7ம் நம்பர்

7-க்கு இவ்வளவு பெருமையா?
பூரித்து போய் விட்டேன்.... நீங்களும்
கொஞ்சம் படிச்சு பாருங்கள்
.
எண் ஏழின் சிறப்புக்கள்:-
👉 எண் ஏழு (Number 7) பெருமை - இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது. உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி.
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
.
எண் ஏழின் சிறப்புக்கள்:-
~~~~~~
1). புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு
இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
.
2). எழு குன்றுகளின் நகரம் ரோம்
.
3). வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
.
4). மொத்தம் ஏழு பிறவி
.
5). ஏழு சொர்க்கம்(குரான்)
.
6). ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
.
7). வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
.
8). ஏழு வானங்கள். (Qur'an)
.
9). ஏழு முனிவர்கள் (Rishi)
.
10). ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
.
11). ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
.
12). ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு.
.
13). ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
.
14). கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு
(Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
.
15). திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள்,
133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டு தொகையும் ஏழு.
.
16). மேலுலகம் ஏழு
.
17). கீழுலகம் ஏழு
""நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே""
- திருமூலர் பாடல்.
.
18). திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
.
19). மொத்தம் ஏழு தாதுக்கள்
.
20). ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
.
21). ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
.
22). ஏழு புண்ணிய நதிகள்
.
23). இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
.
24). அகப்பொருள் திணைகள் ஏழு
.
25). புறப்பொருள் திணைகள் ஏழு
.
26). சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
.
27). கடை ஏழு வள்ளல்கள்
,
28). சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
.
29). "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
.
30). ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள்
.
31). ஏழு மலையான் (திருப்பதி, ஆந்திரா)
.
32). மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
.
33). உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
.
34). பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு
பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்
.
இணையத்தில் இருந்து copy செய்து இங்கு வெளியிட்ட என் பெயர் இனிசியலுடன் சேர்த்து ஏழு தான். (தி.ச.கந்தசாமி) 
.............
🙏� வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 

உழைப்பாளர் தினம் - VOC

8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் முதல் வேலை நிறுத்தம் செய்தவர் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், VOC அய்யா அவர்கள். 


.
இடம் தூத்துக்குடியில் உள்ள மதுரா கோட்ஸ் (,ஹார்வி மில்ஸ், மெஜுரா மில்ஸ், மெஜுரா கோட்ஸ், கோட்ஸ் வயலா என காலத்திற்கு காலம் மாறிய இந்நிறுவனம் , ) 
.
இதற்காக வேலை நிறுத்த நாளில் தன் சொத்தை விற்று தொழிலாளர்களுக்கு உணவளித்த பெருந்தகை.

இவர் ஆற்றிய அரும் பணிகளை, வரலாற்றில் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டது ஒரு சிறு கும்பல். வெள்ளைக்காரன் இவர் பெயரை கண்டாலே அன்று நடுங்கினான். இன்றும் இங்கிலாந்தில் இந்திய விடுதலை போரில் வ..உ.சி  ( VOC ) பெயர் உள்ளது. அனால் நமது நாட்டில் மட்டும் இவரின் பெயரை சொன்னால் தமிழகத்தை தவிர வேறு எங்கும் யாருக்கும் தெரியாது. அந்தளவு இவரின் தியாகத்தை மூடி மறைத்து விட்டனர்.   


இந்நாளில் அவரை நினைவில் கொள்வோம்.

Wednesday, July 24, 2013

இந்திய பொருளாதாரம்.


சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. 


கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. 

வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் ணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சுமார் 4.6 சதவீதம் சரிவடைந்ததாக வணிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்திற்கு காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த முக்கிய தரவுகள் வரும் ஜூலை 30 ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் வெளியிட்டப்பட உள்ள முதல் காலாண்டு நிதி கொள்கையின் மறு ஆய்வு அறிக்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பணவீக்கத்தை குறைப்பது போன்ற இரு முக்கிய செயல்களுக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் ஒரு கடினமான பணியினை மேற்கொண்டு வருகிறது. எனினும், இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்றாக குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை நம்பிக்கை அளிக்கிறது. வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு தங்கம் மற்றும் வெள்ளி போன்ற இதர விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வர்த்தக தரவுகள், ஜூன் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு முந்தைய மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது. இந்த மிக முக்கியமான துறைகளின் தரவுகளைப் பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (PMEAC) தலைவர் திரு சி ரங்கராஜன், "கடந்த ஆறு ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உணர முடியும் ... எனவே, நான் தற்பொழுது உள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலை கண்டிப்பாக மேம்படும் என நினைக்கின்றேன்", எனத் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்பாட்டின் மிக முக்கிய அம்சமான வட்டி விகிதம் குறைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது, மேலும் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் வேறு கவலை தரத், தக்க விதத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். டபிள்யூபிஐ (WPI) அடிப்படையிலான பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. இந்திய அரசாங்கம் ஐஐபி (IIP) மற்றும் சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட காரணத்தால், பங்குச் சந்தை மற்றும் பணச் சந்தைகளில் இந்தத் தரவுகளின் தாக்கத்தை நம்மால் உடனடியாக உணர முடியவில்லை. பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 282.41 புள்ளிகள் அதிகரித்து 19,958.47 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த மே 30 க்கு பின்னர் சென்ஸெக்ஸ் சந்தித்த உட்ச பட்ச அளவாகும். அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சுமார் 11 பைசா அதிகரித்து 59.56 என்கிற அளவில் முடிவடைந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வார கால அளவில் இந்திய ரூபாயின் அதிக பட்சமாகும். ஐஐபி (IIP) தரவுகளின் படி, மே மாத தொழிற்சாலை உற்பத்தி குறைந்தற்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் மோசமான செயல்பாடே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஐஐபி (IIP) 1.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 2.5 சதவீதமாகவும் இருந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐஐபி (IIP) அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்சாலை வெளியீடு மிகக் குறைந்த அளவாக 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே மாதத்தில் இது சுமார் 0.6 சதவீதமாக இருந்தது. குறியீட்டு எண்ணில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கும் உற்பத்தி துறையானது சுமார் 2 சதவீதத்தை தொட்டு விட்டது. கடந்த ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தித் துறையானது சுமார் 2.6 சதவீதம் என்கிற அளவில் இருந்தது. மே மாதத்தில் சுரங்க துறை உற்பத்தி மிக அதிகமாக சுமார் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி சுமார் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையில் உள்ள 22 தொழில் குழுக்களில் சுமார் 11 குழுக்கள் மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளன. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வர்த்தக தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தின் அதே பருவத்தை ஒப்பிடுகையில் சுமார் 4.6 சதவீதமாக குறைந்து விட்டது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 23.79 பில்லியன் டாலராக உள்ளது. நம் நாட்டின் இறக்குமதி அளவு 0.37 சதவீதம், அதாவது 36 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது. இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவே மிக முக்கிய காரணம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (DGFT) திரு அனுப் புஜாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 9.31 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் சில்லறை பணவீக்க விகிதத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் திடீரென்று ஒரு ஏற்றத்தை சந்தித்துள்ளது. காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது செங்குத்தாக அதாவது சுமார் 14.55 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கிரிஸல் தலைமை பொருளாதார நிபுணர் டி கே ஜோஷி "ஐஐபி (IIP) தரவுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

மேலும் இது நாட்டின் பொருளாதார மீட்சி மிக அருகில் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது, வளர்ச்சி இன்னும் அதன் அடித்தளத்தை தொடவில்லை" என்று கூறினார்.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சுமார் 4.6 சதவீதம் சரிவடைந்ததாக வணிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்திற்கு காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த முக்கிய தரவுகள் வரும் ஜூலை 30 ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் வெளியிட்டப்பட உள்ள முதல் காலாண்டு நிதி கொள்கையின் மறு ஆய்வு அறிக்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பணவீக்கத்தை குறைப்பது போன்ற இரு முக்கிய செயல்களுக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் ஒரு கடினமான பணியினை மேற்கொண்டு வருகிறது. எனினும், இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்றாக குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை நம்பிக்கை அளிக்கிறது. வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு தங்கம் மற்றும் வெள்ளி போன்ற இதர விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வர்த்தக தரவுகள், ஜூன் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு முந்தைய மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது. இந்த மிக முக்கியமான துறைகளின் தரவுகளைப் பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (PMEAC) தலைவர் திரு சி ரங்கராஜன், "கடந்த ஆறு ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உணர முடியும் ... எனவே, நான் தற்பொழுது உள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலை கண்டிப்பாக மேம்படும் என நினைக்கின்றேன்", எனத் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்பாட்டின் மிக முக்கிய அம்சமான வட்டி விகிதம் குறைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது, மேலும் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் வேறு கவலை தரத், தக்க விதத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். டபிள்யூபிஐ (WPI) அடிப்படையிலான பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. இந்திய அரசாங்கம் ஐஐபி (IIP) மற்றும் சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட காரணத்தால், பங்குச் சந்தை மற்றும் பணச் சந்தைகளில் இந்தத் தரவுகளின் தாக்கத்தை நம்மால் உடனடியாக உணர முடியவில்லை. பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 282.41 புள்ளிகள் அதிகரித்து 19,958.47 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த மே 30 க்கு பின்னர் சென்ஸெக்ஸ் சந்தித்த உட்ச பட்ச அளவாகும். அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சுமார் 11 பைசா அதிகரித்து 59.56 என்கிற அளவில் முடிவடைந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வார கால அளவில் இந்திய ரூபாயின் அதிக பட்சமாகும். ஐஐபி (IIP) தரவுகளின் படி, மே மாத தொழிற்சாலை உற்பத்தி குறைந்தற்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் மோசமான செயல்பாடே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஐஐபி (IIP) 1.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 2.5 சதவீதமாகவும் இருந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐஐபி (IIP) அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்சாலை வெளியீடு மிகக் குறைந்த அளவாக 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே மாதத்தில் இது சுமார் 0.6 சதவீதமாக இருந்தது. குறியீட்டு எண்ணில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கும் உற்பத்தி துறையானது சுமார் 2 சதவீதத்தை தொட்டு விட்டது. கடந்த ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தித் துறையானது சுமார் 2.6 சதவீதம் என்கிற அளவில் இருந்தது. மே மாதத்தில் சுரங்க துறை உற்பத்தி மிக அதிகமாக சுமார் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி சுமார் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையில் உள்ள 22 தொழில் குழுக்களில் சுமார் 11 குழுக்கள் மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளன. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வர்த்தக தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தின் அதே பருவத்தை ஒப்பிடுகையில் சுமார் 4.6 சதவீதமாக குறைந்து விட்டது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 23.79 பில்லியன் டாலராக உள்ளது. நம் நாட்டின் இறக்குமதி அளவு 0.37 சதவீதம், அதாவது 36 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது. இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவே மிக முக்கிய காரணம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (DGFT) திரு அனுப் புஜாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 9.31 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் சில்லறை பணவீக்க விகிதத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் திடீரென்று ஒரு ஏற்றத்தை சந்தித்துள்ளது. காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது செங்குத்தாக அதாவது சுமார் 14.55 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கிரிஸல் தலைமை பொருளாதார நிபுணர் டி கே ஜோஷி "ஐஐபி (IIP) தரவுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

மேலும் இது நாட்டின் பொருளாதார மீட்சி மிக அருகில் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது, வளர்ச்சி இன்னும் அதன் அடித்தளத்தை தொடவில்லை" என்று கூறினார்.